Thursday, September 21, 2006

ஜிப்மரை'க் காப்பாற்றுங்கள்!

நேற்றைய தினமலரில் படித்தது-20.09.2006

ஜிப்மரை'க் காப்பாற்றுங்கள்!

பெயர் வெளியிட விரும்பாத பெண் டாக்டர், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்:

நான் ஒரு டாக்டர்; புதுச்சேரியில் உள்ள "ஜிப்மரில்' படித்துத் தான் பட்டம் பெற்றேன். இன்று அது சில ஜாதிக் கட்சித் தலைவர்களிடம் சிக்கி சீரழிவதை காண சகிக்கவில்லை. நானும் வன்னியர் இனத்தை சார்ந்தவள் தான். ஆனால், அப்படி சொல்ல வெட்கித் தலைகுனிகிறேன்.


"ஜிப்மர்' மத்திய அரசுத் துறையின் கீழ் இருந்ததால் தான், என் போன்றோர் எங்கள் கல்வி செல்வத்தை மட்டுமே நம்பி பயன் பெற முடிந்தது. இன்று வேலையும் செய்ய முடிகிறது. ஆனால், இது தன் னாட்சி ஆக மாறி விட்டால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங் கள், கோடீஸ்வரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே பட்டம் பெற முடியும். அதுவும் யாருக்கு என்பது "ஜிப்மர்' வளாகத்தில் முடிவு ஆகாது; இன்றுள்ள சூழ்நிலையில் தைலாபுரத்தில் தான் முடிவாகும்; சீட்கள் கோடிகளுக்கு மேல் விலை பேசப்படும்; கட் டணம் பல மடங்கு உயர்ந்து
விடும்; ஏழை மாணவர்கள் டாக்டர் ஆவது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்.
பஸ் செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு மற்ற மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவை இல்லை என நினைத்து வரும் ஏழை, எளியவர்கள் இனி வேறு இடம் பார்க்க வேண்டியது தான். ஏனென்றால், தன்னாட்சி; ஆனால், அது தனியார் மருத்துவமனை போல் மாறிவிடுவது நிச்சயம்.
ஜவகர்லால் நேரு எனும் ஒரு உன்னதமான மாமனிதர் புதுவைக்கு தந்த சீதனம் "ஜிப்மர்!' சோனியாவை நம் நாட்டு மருமகளாக ஏற்று நாட்டை நிர்வகிக்க நாம் அனுமதி தந்திருக்கிறோம். ஆனால், தான் வாழ வந்த வீட்டினர் அளித்த சீதனத்தை அவர் ஒரு ஜாதிக் கட்சிக்கு தாரை வார்க்க தயாரானது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
அதேபோல், புதுவையை ஆளும், "வாழும் காமராஜர்' என்று பெயர் பெற்ற முதல் வர் எல்லாவற்றுக்கும் இலவசம் என்கிறார். ஆனால், ஏழைகளுக்காக உயிரை காப்பாற் றும் மருத்துவத்தை இலவசமாக அளிக்கும், "ஜிப் மர்' மருத்துவமனையை காக்க முன்வரவில்லை. தேசியக் கட்சி ஒரு ஜாதிக் கட்சியிடம் பயப்படுகிறது.
என்னை சார்ந்தவர்களோ, என் குடும்பத்தாரோ யாரு மே ஜிப்மரில் பணியாற்றவில்லை. ஆனால், அது என் தாய் வீடு. எனக்கு கல்வி தந்த மகத்தான நிறுவனம். எனக்கு வாழ்க்கை தந்த நிறுவனத்தைக் காப்பாற் றினால், துõரத்தில் இருந்து பார்த்து மகிழ்வேன். ஆகவே, "ஜிப்மர்' இன்று காப்பாற்றப் பட வேண்டும்.""""""


கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்கானுங்களேடா...கூறு கெட்ட தமிழா....என்னது இதுவும் ஆரிய சதியா....சரிதான்...இனிமே ஆண்டவன் வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது,,, Enjoy....

Enjoy எதுக்கா....


When you can't resist RAPE...ENJOY it.