Sunday, September 30, 2007

இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?

"எத்தனை தடைகள் வந்தாலும் தி மு க-வின் நலத்திட்டங்களை செயல் படுத்தியே தீருவோம்."- முதலமைச்சர் கருணாநிதி ( சன் நியூஸில் வந்தது)


இதையேதான் அந்த அம்மாவும் இன்னைக்கு ஜெயா டி வியில் சொல்லியிருக்காங்க - (பெட்டி வாங்கிகிட்டு) நீங்க பண்றதெல்லாம் உங்கள் (திமுக) நலத்திட்டமாம்..மக்கள் நலத் திட்டமில்லையாம்.

நீங்களும் இதே அர்த்தத்தில்தான் சொன்னீங்களா ? ?????

பின் குறிப்பு: இன்னைக்கு சுப்ரீம் கோர்ட் தயவால அந்த அம்மா பக்கம் பக்கமா போட்டு உங்களை வாங்கியிருக்காங்க..நீங்களும் பதில் அறிக்கை,கேள்வி பதில், உடன் பிறப்புக்கு கடிதம், சிலேடை நையாண்டி அல்லாம் போட வேண்டியிருக்கும்..சேது சமுத்திரம், முல்லை பெரியார், காவேரி, கிருஷ்ணா , மக்கள் நலம் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை..அந்தம்மாவுக்கு பதில் அறிக்கை,சவால் எல்லாம் தயார் பண்ணுங்க மொதல்ல.

என்னமோ போங்க...எல்லோரும் நல்லா இருந்தா சரி.

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ

போன வருடம் ஜூன் மாதம் டாவின்சி கோட் என்கிற ஆங்கிலப் படம் ( தமிழில் "ஒரு குற்றப் பத்திரிக்கை" என்ற பெயரில் மொழிமாற்றம் பெற்றது) வெளிவந்த போது அதை அவசர அவசரமாக தடை செய்தது இந்த அரசு- சொன்ன காரணம் - சிறுபான்மை மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தக் கூடும்...அதனால் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அதன் மூலம் தமிழ் நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடும்" என்பதுதான்.

டாவிசி கோட் படத்தில் என்ன இருந்தது ..ஜீசசுக்கு மேரி மக்டலீன் என்பவருடன் திருமணம் நடந்திருந்தது..அது சரித்திரத்தில் ஒரு மறைக்கப் பட்ட உண்மை" என்பதாக கதை நகரும். இது தவிர்த்திருக்க வேண்டிய படமா...அல்லது கருத்து சுதந்திரத்தை பிரதிபலிக்கிறதா? என்பதான விசாரணைகளுக்குள் நான் இப்போது போகவில்லை.அது ஒரு புறம் இருக்கட்டும்.


ஆத்திகவாதி என்ற போர்வையில், ஒரு மதத்தில் கடவுளாக மதிக்கப் படுபவர் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, விமர்சித்து , அதன் மூலம் அந்த மதம் சார்ந்தவர்களது மனம் புண்படுவதையும், இந்த வெட்டி விதண்டாவாதம் நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும் பற்றி கவலைப் படாமல் இருப்பவர்களை நான் கேட்பது, படங்களை ஆய்வு செய்து தணிக்கை செய்யும் சென்சார் போர்டே "இது உண்மையல்ல... ஒரு கற்பனைக் கதைதான்" என்ற தலைப்புடன் வெளியிடலாம் என அனுமதி கொடுத்த ஒரு படத்தினை, நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்பட்ட ஒரு படத்தினை , முழுவதும் தடை செய்தது- அதுவும் மனது புண்படக் கூடும் அமைதிப் பங்கம் ஏற்படக் கூடும் என்ற ஊகங்களின் அடிப்படையில் தடை செய்தது-- "மைனாரிடி" ஓட்டுப் பொறுக்கும் அரசியல் தந்திரல்லாது வேறென்ன ?


இத்தனைக்கும் இந்தப் படத்தினை தடை செய்த பிறகுதான் கள்ளச் சந்தையில் அதன் டி வி டி க்கள் அமோகமாக விற்பனையானது என்பது தனிக்கதை.


" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாட்டுதான் ஞாபகம் வருகிறது.

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ...

சேது சமுத்திர கால்வாய் திட்டம்...நடக்குமா?

செய்தி : தின மலர்(30/09/07)

சேது சமுத்திர கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது ஒரு புறம் இருக்க, கடுமையான பண நெருக்கடியால் இந்த திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா? என்ற நிலையும் உருவாகியுள்ளது.

யு.டி.ஐ., வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த ஆக்சிஸ் வங்கி தான், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மேற்கொள்ளத் தேவையான கடன் வசதியை பெற்றுத் தரும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, ஆக்சிஸ் வங்கியின் மூலதன சந்தை பிரிவின் துணைத் தலைவர் அசிஷ்குமார் சிங் கூறியதாவது:

" சேது சமுத்திர கால்வாய் திட்டம் 2004ம் ஆண்டு துவங்கியது. அப்போது ரூ. 2, 427 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வசதியை பெற்றுத் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால், தற்போது இந்த திட்டத்தின் செலவு மதிப்பீடு ரூ. 4000 கோடியை தாண்டி விட்டது. கடன் தொகைக்கான வட்டியும் அதிகரித்து விட்டது. கடன் ஒப்பந்தங்களும் காலாவதியாகி விட்டன.

கடலில் கால்வாய் தோண்ட, இந்திய டிரெட்ஜிங் நிறுவனங்களிடம் போதிய கருவிகள் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்காக வசூலிக்கும் கட்டணம் மிக அதிகம். இதுவும் இந்த திட்டம் பின்னடைய முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதற்கு மட்டும் ரூ. 3500 கோடி செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் செலவு : முதலில் ரூ. 2,427 கோடி என்ற அளவில் தான் கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அதற்கு ஏற்றவாறு ஒப்பந் தங்களும் போடப்பட்டன. தற்போது அந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன. எனவே, கூடுதல் கடன் தொகையைப் பெற சேது சமுத்திர திட்ட கார்ப்பரேஷன் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கைகளைத் தயாரித்து பார்லிமென்ட் கமிட்டிகளின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்த பணியைத் துவக்குவது குறித்து கார்ப்பரேஷனிடம் எந்த சலனமும் இல்லை. இந்த கடுமையான பண நெருக்கடியால், சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி மேற் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது. புதிய கடன் தொகையை பெற்றுத் தரும்படி அரசு எங்களை அணுகவில்லை. ஒரு வேளை கடன் தொகையை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டாலும், அந்த கடன் தொகைக்கு அரசு உத்தரவாதம் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த திட்டத்துக்கு கடன் கொடுக்க வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. வட்டி வீதம் அதிகரித்து விட்டது.

அதேபோல, திட்டத்தை முடித்த பின் அதில் இருந்து கிடைக்கும் வருவாயும் துவக்கத் தில் 7.7 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிகள் தயக்கம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

வங்கிகள் தயக்கம் : முன்பு 2005ம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்துக்கு கடன் தொகை பெற வங்கிகளை அணுகிய போது, அவர்கள் காட்டிய ஆர்வம் பாராட்டும்படி இருந்தது. கடன் தொகையையும் எளிதாக பெற முடிந்தது. மொத்த தொகையான ரூ. இரண்டாயிரத்து 427 கோடியில் தூத்துக்குடி, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், இந்திய டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.971 கோடியைத் தருவது, மீதியுள்ள ரூ. ஆயிரத்து 456 கோடியை கடனாக பெறுவது என்று திட்டமிடப்பட்டது. ஆறு வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தியதில், டாய்சி வங்கி, அயர்லாந்தில் துப்ளினில் செயல்பட்டு வரும் தீப்பா வங்கி உட்பட 10 வங்கிகள் கடன் தர முன் வந்தன. அரசு உத்தரவாதம் அளிக்க முன் வந்ததால், வங்கிகள் தயக்கம் காட்டவில்லை. தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த பண நெருக்கடியைச் சமாளிக்க, விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அசிஷ்குமார் சிங் கூறினார்.

செய்தி : தின மலர்(30/09/07)
__________________________________________________________________

இராமர் மேஸ்திரியா ?அணில் கட்டுச்சா, குரங்கு கட்டுச்சா இதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல நாம கால்வாய் வெட்ட முடியுமா?நம்ம கிட்ட துட்டு இருக்கா? என்னென்ன பலன்கள்..இந்தக் கடன் எப்ப எப்படி தீரும் ? இதையெல்லாம் மொதல்ல சொல்லுங்க.பிராக்டிகலா, உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு நல்லது அப்படீன்னா அதை புள்ளி விவரத்தோட மக்களுக்கு சொல்லிட்டா மக்களே இந்தத் திட்டத்துக்கு ஆதரவா நின்னுட்டுப் போராங்க.
அப்பமும் யாராவது "ராமர் பாலம்..சீதை கோலம்" அப்படீன்னு எதிர்த்தால் அப்ப கேக்கலாம் "இராமர் மேஸ்திரியா ? எந்தக் காலேஜு? அணில் கட்டுச்சா?, குரங்கு கட்டுச்சா? " இதெல்லாம்.

அதை விட்டுட்டு சும்மா தமிழனின் 150 வருட கனவு அப்படீன்னு சொல்லி 4000 கோடில எம்புட்டு ஆட்டையப் போடலாம் அப்படீன்னு ஆகாசக் கோட்டை கட்டினா யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

150 வருடத்திற்கு முன்னால் தமிழ"னும்" பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப் பட்டுத்தான் இருந்தான். அப்ப கால்வாய் கனவு கண்டது பிரிட்டிஷ்காரந்தான். அதுவும் அப்பத்திய அவனுடைய நலனுக்காக? ஆனா இன்னைக்கு ?

என்ன சந்தேகம் இவர்களுக்கு?

இராமர் என்பது ஒர் கற்பனை கதாபாத்திரம். இமயம் இருப்பதும், கங்கை இருப்பதும் எப்படி உண்மையோ அப்படியே ராமர் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதும் உண்மை.
இராமாயாணம் என்பது திராவிடர்களின் மீது ஆரியர்களது படையெடுப்பை ஒட்டி புனையப்பட்ட ஒரு புனை கதை.இதை பண்டித ஜவஹர்லால் நேருவே குறிப்பிட்டிருக்கிறார்

இப்படி ஒர் பக்கம் " இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை" என்று கூப்பாடு
மறுபக்கம்
" ராமன் கடவுளின் அவதாரமில்லை.. குடிகாரன்,மாமிசம் சாப்பிட்டான் என்று வால்மீகி ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது " என்று தூற்றுவது.

" (உங்களைப் பொருத்த வரை இல்லாதவன்) எப்படி புலாலும் மதுவும் சாப்பிட முடியும் "

உங்களது நிலைபாடு"ராமன் என்பவன் இல்லவே இல்லை..பொய்"என்பதா அல்லது " அப்படி இருந்து புலால் சாப்பிட்டு மது அருந்தினான் " என்பதா ?
இப்படி அவசரக் குடுக்கை, முந்திரிக் கொட்டை மாதிரி யோசிக்காமல் ஏதாவது சொல்லிவிட்டு அதற்கு சப்பைக் கட்டு கட்டுவதால்தான் விஷயம் பூதகரமாகி விடுவது புரிகிறதா? இல்லை வழக்கம் போல் வேண்டுமென்றேதான் இதை செய்து கொண்டிருக்கிறீர்களா?

முதலில் உங்களுக்கு "தெளிந்த" பின் (முடிந்தால்) சரியாக யோசித்து கேள்வி கேளுங்கள்.

ராமர்....பந்த்....உண்ணாவிரதம்...அப்புறம்

முன்னெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களின் தவறான அல்லது எதிரான கொள்கைகளை சுட்டிக் காட்டி எதிர் / மாற்று கட்சியினர் போன்றோர் "பந்த்" போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர்.இப்போது "பகுத்தறிவு கண்ட பரிணாம வளர்ச்சியால்" ஆட்சியில் உட்கார்ந்து கொண்டே "பந்த்" நடத்துவது. இது எந்த மாதிரி கையாலாகாததனம் என்று இன்னும் மக்களுக்கு புரியவில்லை

இப்படித்தான் போனதடவை உச்ச நீதி மன்றம் விதித்த இடக்கால தடையை எதிர்த்து (இட ஒதுக்கீட்டுக்கு எதிராக) 31.03.07 அன்று பந்த் நடத்தி ஓய்ந்தார்கள். அதற்கப்புறம் அதை முன்னெடுத்துச் செல்ல என்ன கிள்ளிப் போட்டார்கள் என்று கேட்டால் ??? ஒன்றும் இல்லை.

இப்போது 6 மாதம் கழிந்து மறுபடியும்..தேவையற்ற ஒரு ஸ்டண்ட்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒரு பந்த் அறிவிப்பு...யாருக்கு எதிராக அல்லது இதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தார்கள் என்பது வழக்கம் போல் பகவான் ராமருக்கே வெளிச்சம்.

ஆட்சியில் இருப்போரே பந்த் என்ற பெயரில் நடத்தும் கேலிக்கூத்துக்களை சுட்டிக்காட்டும் விதமாக "இனி எந்த மாநிலத்திலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பந்த் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது " போல் தெரிகிறது.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "உச்ச நீதி மன்றத்தின் " தடையை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டமாம்..அப்ப சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ? அது அப்புறம் பார்க்கலாம்...one at a time ?????!!!!!

அது சரி..இந்த உண்ணாவிரதம் ஒரு நாளைக்கா? தொடர் உண்ணாவிரதமா?