Friday, December 28, 2007

"மணக்கும் நட்சத்திரம்"

தமிழ் மணம் நட்சத்திரப் பதிவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அவரது பதிவுகளை தமிழ்மண முகப்பில் வைத்து பெருமைப் ?! படுத்துகிறது

அந்தப் பதிவரின் நட்சத்திர முதல் பதிவில் வாழ்த்துக்கள், நட்சத்திர வாழ்த்துக்கள் போன்ற பின்னூட்டங்கள் வந்து அது ஒரு அங்கிகாரக்தான் போலும் என்ற நினைப்பை வரவழைக்கிறது.அந்த அங்கீகாரம் ஓரளவு உண்மையும் கூட



நானும் பல நாட்களாக நல்ல தேர்ந்த சீனியர் பதிவர்கள் , பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து போடுவார்கள் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.



ஆனால் இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரத்தின் வலைப் பூவில் முகப்பில் காணக் கிடைக்கும் செய்தி


"இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி."




அதாவது குற்றச் சாட்டுக்கள் உண்மையாய் இருந்தாலும் கூட சார்பு நிலையுடைய இவர் அதற்கும் விளக்கம் தர ( ஒத்துக் கொள்ள மாட்டார்...சப்பைக் கட்டு கட்டுவார் போல) முயலும் ஒரு வலைத்தளம்தான் என அக் மார்க் முத்திரை குத்திக் கொண்டதுதான் இந்த வார நட்சத்திரத்தின் வலைப்பூ.



சார்பு நிலையுள்ளவர்கள் நட்சத்திரப் பதிவராகக் கூடாதா என்றால் தாராளமாக ஆகலாம்..

முன்னாலும் லக்கி லுக் போன்ற திமுக கட்சி சார்புடைய பதிவர்கள் நட்சத்திரங்களாக்கப் பட்டிருக்கிறார்கள்...பார்ப்பனீயத்தை ஆதரிப்பதாக கட்டம் கட்டப்பட்ட டோண்டு ராகவனும் , அசுரன் போன்ற இடது சாரி சிந்தனையுள்ளவர்களும் நட்சத்திரப் பதிவர்களாகியிருக்கிறார்கள்..அது அவர்களது சார்பு நிலை ..ஆனால் அந்த வலைப் பக்கங்களில் கொஞ்சமேனும் வெரைட்டியும் படிப்பவர்களுக்கு ஆர்வமேற்படுத்தும் விஷயங்களும் இருக்கும்..(அட்லீஸ்ட் அந்த நட்சத்திர வாரத்திலேயாவது) ஆனால் இந்த வார நசத்திரப் பதிவரின் பதிவுகள் அப்படியா? ஒரு வட்டத்தை விட்டு அவரது பதிவுகள் வெளியே சென்றதே இல்லை..பதியும் மூன்று வருடங்களாக !!!!! இப்படிப் பட்ட நட்சத்திரப் பதிவர்களாய் ஏற்படுத்தி என்ன சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை? இல்லை ஆள் பற்றாக் குறையா ?



நட்சத்திர பதிவர்களாக்குவது எங்களது இஷ்டம்..யாரை வேண்டுமானாலும் ஆக்கி படிக்கும் அனைவரையும் கொடுமைப்படுத்துவோம் என தமிழ் மணம் சொல்லலாம், சொன்னாலும் அது சரியே.



ஆனால்

நட்சத்திரப் பதிவு என்றால் ஒரு அலர்ஜியும் , அதே சமயத்தில்

"உங்களைப்போன்றவர்களை எல்லாம்... நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்! "

போன்ற அவல பின்னூட்டங்களும் வருகிறதே ???

தெளிந்து தமிழ் மணமாவது அல்லது நட்சத்திரமாவது மாறினால் நல்லது :))

Tuesday, October 02, 2007

நேற்றைய போராட்டம் வெற்றியா ? தோல்வியா?

ஒரு பந்த் , போராட்டம் என்று அறிவித்தால் அதன் வெற்றியை எப்படி கணிப்பது?

வேறெப்படி? எத்தனை கடைகள் மூடியிருந்தன / திறந்திருந்தன, எத்தனை பொது போக்குவரத்து சாதனங்கள் ஓடின / ஓடவில்லை, பொதுமக்களை எந்த அளவிற்கு கஷ்டப் படுத்தினோம் / படுத்தவில்லை என்பதை வைத்துத்தான்.

போராட்டத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்யவேண்டும்?

மிரட்டல் மூலமாகவோ, பயமுறுத்தியோ ,வன்முறையாகவோ கடைகளை அடைக்க வைத்துவிட வேண்டும். அதே பாணியில் பொது போக்குவரத்து ஓடவிடாமல் செய்து விட்டால் பெருவாரியான பொதுசனம் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது அப்படி வந்தாலும் கடைகள் அடைத்திருப்பதால் செய்வதற்கு ஒன்றும் இருக்காது..அப்படியே வந்தாலும் கூட்டமாக நின்று கல்லடித்தால் முடிந்தது கதை ..ஒரு இடத்தில் நடந்தாலும் போதும்..செய்தி பரவிய பின் எந்த ஆண் மகனுக்கும் வெளியே வர தைரியம் வராது..அப்புறமென்ன போராட்டம் அமோக வெற்றிதான்..பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தின் உணர்வுகளை அப்படியே கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார்கள். இதை மறுநாள் பேட்டியில் சொல்லி மார் தட்டிக் கொள்ளலாம்.

நேற்றைய போராட்டமும் இந்த விதிகளுக்கு மாறாமல் அழகாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது...




ஆனால் நடுவில் உச்ச நீதி மன்றம் வந்து குழப்பி விட்டது.கொஞ்சம் விதிகள் மாறி விட்டபடியால் நேற்றைய விளையாட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் தமாஷாகவும் போயிற்று.


சில சாம்பிள்கள் கீழே.


போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை தி மு க மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த சங்கங்கள் பலமுள்லதாக இருப்பதால் பெருவாரியான பஸ்கள் ஓடவில்லை.மீறியும் ஓடிவிடக்கூடாது என்று இரவோடிரவாக டெப்போக்களில் முன்னால் நிற்கும் பஸ்களின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு எந்த பஸ்ஸுமே எடுக்க முடியாமல் செய்வது , காலையிலேயே கூட்டமாக சென்று டெப்பொக்களிலிருந்து பஸ்களை எடுக்க விடாமல் செய்வது போன்ற அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் அதிமுக யூனியனை சேர்ந்தவர்கள் பஸ்ஸை ஓட்ட முன் வந்தார்கள்- பொது நல சேவைக்காக அல்ல-எதிர்க் கட்சிப் போராட்டத்தை முறியடிக்கும் ஒரே நோக்கத்தில். ஆனால் அதிகார வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் வேலையை திறம்படவே செய்திருக்கிறார்கள்.பஸ்களை ஓட்டுங்க , ஆனா பஸ்ஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தா அதுக்கு டிரைவரும் கண்டக்டரும்தான் பொறுப்பு என்று பொறுப்பாக பதில் சொல்லியிருப்பார்கள்.அப்புறம் எவனாவது பஸ்ஸை எடுப்பான்?

ஆளுங்கட்சியின் நோக்கமே சுப்ரீம் கோர்ட்டே தடுத்தும் , நாங்கள் அறிவிக்காத போதும், பந்த் தானாகவே வெற்றிகரமாக நடந்து மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலித்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான்.

ஆனால் இவர்களது இந்த எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது. அதிமுக வேக வேகமாக காய்களை நகர்த்தி, பந்த் என்று சொல்லாவிட்டாலும் பஸ்கள் ஓடவில்லை என்றெல்லாம் வத்தி வைக்க கோபமான உச்ச நீதிமன்றம் "ஏன் ஆட்சியைக் கலைக்கக் கூடாது" என்று ஒரு குண்டத்தூக்கிப் போட, காலையில் பஸ்ஸை ஓட விடாமல் செய்தவர்களுக்கே பஸ்களை ஓடவிட்டு பந்த் எல்லாம் இல்லை என்று காட்டவேண்டிய கட்டாயம்.

ஆனால் இவர்கள் யூனியனே இதைச் செய்தால் கேவலமாயிற்றே அதனால் அதிகாரிகள் அதிமுக யூனியனைச் சேர்ந்தவர்களைப் போய் பஸ்ஸை எடுக்கச் சொல்லி கேட்க அவர்களோ" காலையில் நாங்கள் சொன்ன போது நீங்கள் விடவில்லை, இப்போது நீங்கள் கேட்டு நாங்கள் எதற்கு செய்யவேண்டும்? முடியாது என முரண்டு பிடித்துள்ளனர்.

அப்புறம் எப்படியோ ஒப்பேற்றி சில பஸ்களை போலிஸ் பாதுகாப்புடன் ஓடவிட்டு அதை வீடியோ படம் எடுத்து ஓட்டிவிட்டதற்கான ஆதாரம் சேகரித்துக் கொண்டனர்.ஏனென்றால் நாளைக்கு ஆதாரம் காட்ட வேண்டுமல்லவா? எல்லாம் நார்மல்தான் என்று.


சரி..எது எப்படியோ..பொதுமக்களின் கதியென்னவோ இப்படியாகத்தான் இருந்தது.




இந்த மாதிரியான அரசியல் கோமாளிகளுக்கு ஓட்டுப் போடும் மற்றும் துணை போகும் நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

படங்கள்:நன்றி-தினகரன் மற்றும் தினமலர்

"கேக்குற" மாதிரி "காதுல" போட்டு வைக்கக் கூடாதா?

அரசியல் என்றாலே அறிக்கை , பதில் அறிக்கை, சவால், சவாலுக்கு சவால் என்றாகி விட்டாலும் ரொம்ப காமடி பண்ணா சுட்டிக்காட்டாம இருக்க முடியலை.தி மு க தலைமையில் நேற்று நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதிலிருந்து சில துளிகள்(சிவப்பில் கொடுக்கப்பட்டது அவர் மேடையில் சொன்னது)


///ஜெயலலிதாவின் வற்புறுத்தலினால் தி.மு.க., அரசை 89ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். நாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு தமிழத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தோம். அவர் ஒன்றும் கலைக்க மாட்டார். ///

ஏற்கனவே ஜனாதிபதியை சரிக்கட்டி வச்சுருக்கோம் அப்படீன்னு சொல்ல வர்ரீங்களா?


////மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மதிக்கிற தலைவர் கருணாநிதி. அவர்கள் இருக்கும் வரை சுப்ரீம் கோர்ட் என்ன, ஐ.நா., சபை சொன்னாலும் தி.மு.க., ஆட்சியை கலைக்க முடியாது////

இப்படி வாயக்குடுத்து ஏன் நீங்களே மாட்டிக்கிறீங்க? இப்ப ஐ நா சபையை எதுக்கு இழுக்கணும் ?

///அத்வானி ராமேஸ்வரத்திற்கு வரட்டும். அவர்களை நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்கிறோம். அங்கு பாலம் இருந்தால் காட்டட்டும். கப்பல் அங்கு ஓடத் தான் போகிறது. சோனியா, மன்மோகன் சிங் கொடி அசைக்க வரவுள்ளனர். கப்பலில் டி.ஆர்.பாலு மாலுமியாக இருப்பார்///

அந்த இடத்துல தண்ணிக்கு மேல கப்பல் போறதுக்கே ஆழம் பத்தாது.மணல் திட்டா இருக்கு.அங்க கப்பல் போறதுக்கு கால்வாய் வெட்டத்தான் இந்தப் போராட்டமே அப்படீன்னு உங்க " காதுல விழுகுற மாதிரி " யாருமே சொல்லலியா? கப்பலே ஓட முடியாத இடத்தில நீர் மூழ்கிக் கப்பல்ல கூட்டிக்கிட்டு போறேன்றீங்களே.

அது சரி, கப்பலில் டி ஆர் பாலு மாலுமியாக இருப்பார் அப்படீங்குறீங்களே.. அவர் எந்தக் காலேஜில் மரைன் இன்ஜினீரிங் படிச்சார் அப்படீன்னு தலைவர் கேக்க மாட்டாரா? ராமரை மட்டும்தான் கேப்பாரா ?

மேடை கிடச்சு மைக் கிடைச்சு முன்னாடி ஒரு கூட்டமும் பக்கத்துல ஒரு தலைவரும் இருந்துட்டா என்ன வேணா காமடி பண்ணலாம் அப்படீங்குறதை நிறுத்தி என்னைக்கு அறிவு பூர்வமா பேசுவாங்களோ இந்த அரசியல்வாதிங்க.

Monday, October 01, 2007

பாவம் அ மு க...தப்புத் தப்பாய் ஒரு தப்பு

2 நாட்கள்...10 பதிவுகள்...நேற்றும் இன்றும் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை ஒட்டி.

அவ்வளவுதான்...யார் யாருடனோ சம்மந்தப் படுத்தி அவர்தான் இவர்... இவர் நடையும் அவர் நடையும் ஒன்றுதான்..இவராகக் கூட இருக்கலாம் என என்னென்னவோ சொல்லி புலம்புகிறார்கள் இந்தப் பதிவில்


இதில் அந்தப் பதிவர் தமிழ் மணத்தினை தூற்றுகிறார், இங்குவந்து தமிழ்மணத்தை உபயோகிக்கிறார் என்று சைகலாஜிகல் அட்டாக் வேறு.


அ மு க வினருக்கு சொல்வதெல்லாம் " நான் நீங்கள் எழுதும் நபர் இல்லை." " இதைச் சொல்லாமல் உங்களனைவரையும் இந்த மாதிரி யூகத்திலேயே வைத்து நல்லா ஏமார்ந்தீர்களா என்று நான் எள்ளி நகையாடலாம்...ஆனால் எனக்கு அதற்கு விருப்பமும் இல்லை...நேரமும் இல்லை."

சரி........ நாங்க ஐபி வச்சு கண்டுபிடிப்போம் அத்தை வச்சு கண்டு பிடிப்போம் அப்பட்டிங்குறதெல்லாம் சும்மாதானா..சரவணன், சரவண குமார் அப்படீன்னு இருந்தா சும்மா நூல் விட்டு பாப்பீங்களா? ஆனைக்கு அர்ரம்னா குதுரைக்கு குர்ரமா ?



இந்த மாதிரி வெட்டி ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து என் பதிவு சம்பந்தமாக கருத்து ரீதியாக ஏதேனும் சொல்ல முடிந்தால் ஒருவேளை அது படிப்பவர்களுக்கும் பயனளிக்கக்கூடும் .

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...வானம் ஏறி

அமைச்சர் டி ஆர் பாலு தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப் படாமல் காலதாமதம் ஆகின்றன.

இதனால் செலவுத் தொகையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையாலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் பணி.இது கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்த கால கட்டத்துக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதில் கிடைத்த தகவல்கள்

கிழக்கு,மேற்கு& வடக்கு ,தெற்கு இணைப்பு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியும்,துறை முகங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தி நகர்கிறது. ,இந்தத் திட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட காலக் கெடு முடிந்த பின்னும் பணிகளின் தாமதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை


ஆந்திராவில் நெடுஞ்சாலை எண் 7 ல் 2003 ஆம் வருடமே ஒப்புதல் வழங்கப்பட்ட அட்லூரு-கால்காலு இடையேயான சாலை 0.5% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது( திட்ட மதிப்பு ரூ 546.15 கோடி)


இது தவிர மஹாராஷ்ட்டிராவில் ஜாம்வத்னார்-தேவ்ஹரி-கோலாபூர் நெடுஞ்சாலை, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்7-ல் மதுரை- கன்னியாகுமரி நெடுஞ்சாலைத்திட்டம், நாக்பூர்-ஹைதராபாத் ,பதான்கோட்-போக்பூர் ஆகிய திட்டங்களும் மெத்தனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு-கிழக்கு இணைப்பு திட்டம்-2 ன் கீழ் மேற்கொள்ளப் பட்டு வரும் 40 நெடுஞ்சாலைத் திட்டங்களுமே காலக் கெடுவைத்தாண்டியும் முடியப் போவதில்லை என்ற நிலைதான் காணப் படுகிறது.

கிழக்கு-மேற்க்கு இணைப்பு திட்டம்-2 ல் செயல்படும் 66 நெடுஞ்சாலைத் திட்டங்களும் இதே கதியில்தான்.


தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு வரும் சாலைப் பணிகளும் 3 ஆண்டுகள் கால தாமதமாகவே நடந்து வருகின்றன.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


வனப் பகுதியில் சாலை அமைப்பதில் அனுமதி பெறுவதில் சிக்கல், நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல், சில மானிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவற்றால் இந்தத் திட்டங்கள் தாமதமாகின்றன என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதை நாம் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் நாமக்கு தோன்றும் ஒரு சந்தேகம் - இப்படி ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு நிலுவையில் இருக்கும் பல 1000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தீவிரமும் காட்டாமல் புதிதாக சேது சமுத்திரத் திட்டத்திற்காய் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதன் பின்னணி மக்கள் நலம் மட்டும் தான?


இதைப் பார்த்ததும் நமக்கு நினைவில் வந்த பழமொழி

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்".

பந்த் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்

அறிவிக்கப் பட்டிருந்த அவசர கோல "பந்த்" மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கலந்து கொண்டாலும் பந்த் பற்றி அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள்


காங்., செய்தி ஊடகத்துறை தலைவர் வீரப்ப மொய்லி, "இது போன்ற போராட்டங்கள் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் நடத்தப்படக் கூடாது. சர்ச்சைக்குரிய தீர்மானம் தொடர்பாக உண்மையான தீர்வு காண்பதற்கு பொறுமை காப்பதே நல்லது. இதுபோன்ற, "பந்த்'கள் வன்முறைக்கு திரும்புவதோடு, வாழ்க்கையின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி "சர்வதேச வன்முறை எதிர்ப்பு தின'மாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சிகளும் இந்த நோக்கத்துடன் இந்த தினத்தை கடைப்பிடிப்பது தான் விரும்பத்தக்கது' என்று கூறியுள்ளார்

என்னதான் கவனத்தை ஈர்க்க அது இது என்று சொன்னாலும் "பந்த்" "எதிர்ப்பு" போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரானதுதான்..இப்போது நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் அதனால் இது தேவையில்லாதது என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காங்கிரஸ் மென்று முழுங்குவதைத்தான் இது காட்டுகிறது.

ஏன் ஆட்சியை கலைக்கக் கூடாது?

"பந்த்" கூடாது என்ற தடையுத்தரவை மதிக்காமல் நடந்து கொள்ளும் முதலமைச்சர் மீதும் தலைமைச் செயலர் மீதும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை ஏன் முன்னெடுக்கக் கூடாது என உச்ச நீதி மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் கோர்ட் உத்தரவை அமல் படுத்த முடியாத தமிழக அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது ? கலைத்து விட்டு ஏன் கவர்னர் ஆட்சியை அமல் படுத்தக் கூடாது என மத்திய அரசை கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி உன்ணாவிரதப் பந்தலை விட்டு விட்டு அலுவல்களை கவனிக்க கோட்டைக்கு புறப்பட்டு சென்றார் .அமைச்சர்களும் அவரைத் தொடர்ந்து கோட்டைக்கு சென்று விட்டனர் எனத் தெரிகிறது. (இப்படிப்பட்ட சில்லறை காரணங்களுக்காக தேர்தலில் வென்று பிடித்த ஆட்சியை பணயம் வைப்பது மதியீனம்தான்.)


இதனிடையில் தலைமை செயலர் திரிபாதி பஸ் போன்ற பொதுமக்கள் போக்குவரத்து சாதனங்களை உடனடியாக இயக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து பஸ் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நாளை உண்ணாவிரதம் / பந்த் .. வெற்றி /தோல்வி, பிசுபிசுத்தது / மகத்தான ஆதரவு என எதிரெதிர் அணிகளின் அறிக்கைப் போர் ஆரம்பமாகி விடும். பத்திரிக்கைகாரர்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்..பொதுமக்களுக்கு ?????

ஆட்டம் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம்

எதற்கு என்றே தெரியாமல் அவசர கோலத்தில் ஒரு பந்த்தை அறிவித்து விட்டு அதை உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்ட போது "பந்த்" இல்லை"ஹர்த்தால்" என்கிற கடையடைப்பு ..ஹி..ஹி ...அதுவும் இல்லை "பொதுக்கூட்டம்" என வாரி வழிந்தாகி விட்டது.

இப்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றவுடன் உச்ச நீதிமன்றத்தை தூற்றும் வேலை தொடங்கியாகி விட்டது.

உச்ச நீதி மன்றம் ஏதோ வானத்திலிருந்து பறித்து ஒரு தீர்ர்ப்பை வழங்கவில்லை.

கேரள உயர் நீதி மன்றம் முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்து இந்த"பந்தை" தடை செய்திருக்கிறது. இந்தத் தடை ( அதாவது ஏற்கனவே 1998 ல் உறுதி செய்யப் பட்ட தீர்ப்பை) மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனில் உச்ச நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்தான் முடிவு செய்ய வேண்டும் என "தெளிவாகவே" எடுத்துச் சொல்லியுள்ளது. புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.
இதையெல்லாம் மறைக்கும் முகமாக ஏதோ தமிழ் நாட்டுக்கு எதிராக "வடக்கே உள்ள" உச்ச நீதிமன்றம் சதி செய்வது போல ஓலமிடுவது கேலிக்கூத்துதான்.


முதலில் உச்ச நீதி மன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை.ஏற்கனவே வேறு மாநிலத்தில்(கவனிக்க வேறு மாநிலத்தில்) நடந்த வழக்கு சம்பந்தமாக 1998-ல் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை மாற்றமுடியாது என்று குறிப்பிட்டுள்ளது

இரண்டாவது இப்படியெல்லாம் உச்ச நீதி மன்றத்தை குறை கூறிக் கொண்டு திரியும் இவர்களும் தங்களால் கையாலாகாத போது ( காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியார் ) கை காட்டும் இடம் " உச்ச நீதி மன்றம்". அப்போது மட்டும் நீதி கிடைக்க உச்ச நீதி மன்றத்தை நாட இருக்கிறோம் என்று வெத்து அறிக்கையும் கைகேயி கண்ணீரும் உகுத்துக் கொண்டே இதே மனு நிதி சோழனின் கோட்டை வாசலில்தான் சென்று மாடு மாதிரி மணியாட்டுகிறார்கள்.

நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று நடக்க இருந்த `பந்த்'க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது.

மூன்று மணி நேரம் கடுமையான விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பல முறை குறுக்கிட்ட நீதிபதிகள் மிகவும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்த நாட்டில் இது தான் பிரச்னையாக உள்ளது. இந்த நாட்டில் அனைத்து விஷயங்களையும் இரும்பு கரம் கொண்டு சமாளிக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில் எந்த வேலையும் நடப்பதில்லை. சட்டசபையோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு தான் சமாளிக்க வேண்டி உள்ளது. பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை 1998ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த நாட்டில் கோர்ட் உத்தரவுகள் மீறப்படுவது வருத்தத்துக்குரியது. அனைத்து விஷயங்களையும் கோர்ட் தான் கண்காணிக்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை என்ற நிலை இருக்கும் போது ஐகோர்ட் உத்தரவுகளை பற்றி என்ன கூற வேண்டி உள்ளது. ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளில் 99 சதவீத உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. பந்த்துக்கு சுப்ரீம் அக்டோபர் ஒன்றாம் தேதி பந்த் நடக்கவில்லை. `ஹர்த்தால்' என்ற கடையடைப்பு தான் நடக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பந்த் என்று வந்து விட்டால் அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து விடும். அக்டோபர் ஒன்றாம் தேதி, அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படும் என்று தான் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. எனவே, அக்டோபர் ஒன்றாம் தேதி நடக்க இருப்பது பந்த் அல்ல என்று எப்படி கூற முடியும். அன்றைய தினம் பொது கூட்டம் தான் நடக்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியவில்லை. பொது கூட்டம் எங்கே நடக்கிறது என்பதை காட்டுங்கள். அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது என்று தான் கூட்டணி கட்சிகளின் கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வலிமையை காட்ட நீங்கள் நினைக்கிறீர்கள். அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஏன் மூட வேண்டும்? அனைத்தையும் மூடி விட்டால் கூட்டம் நடத்த எங்கு இருந்து மக்கள் வருவார்கள்?தி.மு.க., கூட்டணி கட்சிகள் தங்கள் வலிமையை காட்ட தான் பந்த் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. யாருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளீர்கள்? சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா? மக்களுக்கு எவ்வித பாதிப்பும் பந்த் நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது என்ற வாதத்தையும் ஏற்கும்படியாக இல்லை. பந்த் நடத்துவது சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ பந்த் நடத்த அழைப்பு விடுப்பது குறித்து தான் இந்த கோர்ட் கவலை கொண்டுள்ளது. பந்த் நடந்தால் பொது வாழ்க்கை ஸ்தம்பித்து போய் விடும். அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு( பேச்சு சுதந்திரம்), 21வது பிரிவு( சுதந்திரத்தின் உரிமை) ஆகிய அடிப்படை உரிமைகளை இது மீறும் செயல். சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மனு, திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்வது பற்றி அல்ல. பந்த் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை முடிவு செய்வது பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது. பந்த் சட்டவிரோதமானது என ஏற்கனவே இந்த கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அக்டோபர் ஒன்றாம் தேதியோ அல்லது வேறு தினத்திலோ தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு (பந்த் சட்டவிரோதம்) தான் இறுதியானது. அந்த உத்தரவு குறித்து இந்த கோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும். பந்த்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு செய்யும் செயல். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல். இந்த கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அரசு வேறு அர்த்தத்தை தரக் கூடாது. உத்தரவை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

செய்தி சாராம்சம் : தினமலர் :01/10/07
------------------------------------------------------------------------------------------------

"அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் செருப்படி" என்றுதான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதை நேரடியாக சொல்வது அரசியல் நாகரீகம் இல்லை என்பதால் "நெத்தியடி" என்று போட்டேன். எப்படி அடிச்சாலும் புத்தி வரவா போகுது ??????!!!!!!!!!!

உண்ணாவிரதம்- சில யோசனைகள்

நாளைக்கு எப்படியும் உண்ணாவிரதம் இருக்கப் போரீங்க. யாரை எதுத்து , எதுக்குன்னு தெளிவா தெரியலை. அப்புறம் சனங்க கொழம்பிடக் கூடாதில்லியா..அதுனால பின் வரும் காரணங்கள்ள ஏதாவது ஒண்ணை சொல்லிவிடலாமே

1.காவிரி நீர் பிரச்சினையில் -விரைவில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல் படுத்த அல்லது புதுசா நடுவர் மன்றம் அமைக்க இப்படி ஏதாவது


2.முல்லை பெரியார் அணை பிரச்சினையில் - உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த அல்லது இங்கும் மத்தியிலும் உங்களுக்கு ஜால்ரா தட்டும் இடது சாரிகள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் பக்கம் திருப்ப


3.இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை - அமல் படுத்தக் கோரி அல்லது எதிர்த்து ரத்து செய்யக் கோரி


4.மதுரை தினகரன் ஆபிஸில் "குடும்ப சண்டையில் " நடந்த வன்முறையில் எறிந்து சாம்பலான மூன்று அப்பாவிகளின் வழக்கில்- மிக வேகமாக டார்ட்டாயிஸ் வேகத்தில் செயல் படும் சிபிசிஐடி யின் கவனத்தை ஈர்த்து கேஸை உண்மையில் வேகமாக நடத்தி உண்மைக் குற்றவாளியை பாரபட்சமின்றி கைது செய்யச் சொல்லி


இதுல எதுவும் பிடிக்கலையா...சரி என்னமோ பண்ணுங்க போங்க.

Sunday, September 30, 2007

இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?

"எத்தனை தடைகள் வந்தாலும் தி மு க-வின் நலத்திட்டங்களை செயல் படுத்தியே தீருவோம்."- முதலமைச்சர் கருணாநிதி ( சன் நியூஸில் வந்தது)


இதையேதான் அந்த அம்மாவும் இன்னைக்கு ஜெயா டி வியில் சொல்லியிருக்காங்க - (பெட்டி வாங்கிகிட்டு) நீங்க பண்றதெல்லாம் உங்கள் (திமுக) நலத்திட்டமாம்..மக்கள் நலத் திட்டமில்லையாம்.

நீங்களும் இதே அர்த்தத்தில்தான் சொன்னீங்களா ? ?????

பின் குறிப்பு: இன்னைக்கு சுப்ரீம் கோர்ட் தயவால அந்த அம்மா பக்கம் பக்கமா போட்டு உங்களை வாங்கியிருக்காங்க..நீங்களும் பதில் அறிக்கை,கேள்வி பதில், உடன் பிறப்புக்கு கடிதம், சிலேடை நையாண்டி அல்லாம் போட வேண்டியிருக்கும்..சேது சமுத்திரம், முல்லை பெரியார், காவேரி, கிருஷ்ணா , மக்கள் நலம் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை..அந்தம்மாவுக்கு பதில் அறிக்கை,சவால் எல்லாம் தயார் பண்ணுங்க மொதல்ல.

என்னமோ போங்க...எல்லோரும் நல்லா இருந்தா சரி.

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ

போன வருடம் ஜூன் மாதம் டாவின்சி கோட் என்கிற ஆங்கிலப் படம் ( தமிழில் "ஒரு குற்றப் பத்திரிக்கை" என்ற பெயரில் மொழிமாற்றம் பெற்றது) வெளிவந்த போது அதை அவசர அவசரமாக தடை செய்தது இந்த அரசு- சொன்ன காரணம் - சிறுபான்மை மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தக் கூடும்...அதனால் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அதன் மூலம் தமிழ் நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடும்" என்பதுதான்.

டாவிசி கோட் படத்தில் என்ன இருந்தது ..ஜீசசுக்கு மேரி மக்டலீன் என்பவருடன் திருமணம் நடந்திருந்தது..அது சரித்திரத்தில் ஒரு மறைக்கப் பட்ட உண்மை" என்பதாக கதை நகரும். இது தவிர்த்திருக்க வேண்டிய படமா...அல்லது கருத்து சுதந்திரத்தை பிரதிபலிக்கிறதா? என்பதான விசாரணைகளுக்குள் நான் இப்போது போகவில்லை.அது ஒரு புறம் இருக்கட்டும்.


ஆத்திகவாதி என்ற போர்வையில், ஒரு மதத்தில் கடவுளாக மதிக்கப் படுபவர் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, விமர்சித்து , அதன் மூலம் அந்த மதம் சார்ந்தவர்களது மனம் புண்படுவதையும், இந்த வெட்டி விதண்டாவாதம் நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும் பற்றி கவலைப் படாமல் இருப்பவர்களை நான் கேட்பது, படங்களை ஆய்வு செய்து தணிக்கை செய்யும் சென்சார் போர்டே "இது உண்மையல்ல... ஒரு கற்பனைக் கதைதான்" என்ற தலைப்புடன் வெளியிடலாம் என அனுமதி கொடுத்த ஒரு படத்தினை, நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்பட்ட ஒரு படத்தினை , முழுவதும் தடை செய்தது- அதுவும் மனது புண்படக் கூடும் அமைதிப் பங்கம் ஏற்படக் கூடும் என்ற ஊகங்களின் அடிப்படையில் தடை செய்தது-- "மைனாரிடி" ஓட்டுப் பொறுக்கும் அரசியல் தந்திரல்லாது வேறென்ன ?


இத்தனைக்கும் இந்தப் படத்தினை தடை செய்த பிறகுதான் கள்ளச் சந்தையில் அதன் டி வி டி க்கள் அமோகமாக விற்பனையானது என்பது தனிக்கதை.


" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாட்டுதான் ஞாபகம் வருகிறது.

ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ...

சேது சமுத்திர கால்வாய் திட்டம்...நடக்குமா?

செய்தி : தின மலர்(30/09/07)

சேது சமுத்திர கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது ஒரு புறம் இருக்க, கடுமையான பண நெருக்கடியால் இந்த திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா? என்ற நிலையும் உருவாகியுள்ளது.

யு.டி.ஐ., வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த ஆக்சிஸ் வங்கி தான், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மேற்கொள்ளத் தேவையான கடன் வசதியை பெற்றுத் தரும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, ஆக்சிஸ் வங்கியின் மூலதன சந்தை பிரிவின் துணைத் தலைவர் அசிஷ்குமார் சிங் கூறியதாவது:

" சேது சமுத்திர கால்வாய் திட்டம் 2004ம் ஆண்டு துவங்கியது. அப்போது ரூ. 2, 427 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வசதியை பெற்றுத் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால், தற்போது இந்த திட்டத்தின் செலவு மதிப்பீடு ரூ. 4000 கோடியை தாண்டி விட்டது. கடன் தொகைக்கான வட்டியும் அதிகரித்து விட்டது. கடன் ஒப்பந்தங்களும் காலாவதியாகி விட்டன.

கடலில் கால்வாய் தோண்ட, இந்திய டிரெட்ஜிங் நிறுவனங்களிடம் போதிய கருவிகள் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்காக வசூலிக்கும் கட்டணம் மிக அதிகம். இதுவும் இந்த திட்டம் பின்னடைய முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதற்கு மட்டும் ரூ. 3500 கோடி செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் செலவு : முதலில் ரூ. 2,427 கோடி என்ற அளவில் தான் கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அதற்கு ஏற்றவாறு ஒப்பந் தங்களும் போடப்பட்டன. தற்போது அந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன. எனவே, கூடுதல் கடன் தொகையைப் பெற சேது சமுத்திர திட்ட கார்ப்பரேஷன் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கைகளைத் தயாரித்து பார்லிமென்ட் கமிட்டிகளின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்த பணியைத் துவக்குவது குறித்து கார்ப்பரேஷனிடம் எந்த சலனமும் இல்லை. இந்த கடுமையான பண நெருக்கடியால், சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி மேற் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது. புதிய கடன் தொகையை பெற்றுத் தரும்படி அரசு எங்களை அணுகவில்லை. ஒரு வேளை கடன் தொகையை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டாலும், அந்த கடன் தொகைக்கு அரசு உத்தரவாதம் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த திட்டத்துக்கு கடன் கொடுக்க வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. வட்டி வீதம் அதிகரித்து விட்டது.

அதேபோல, திட்டத்தை முடித்த பின் அதில் இருந்து கிடைக்கும் வருவாயும் துவக்கத் தில் 7.7 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிகள் தயக்கம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

வங்கிகள் தயக்கம் : முன்பு 2005ம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்துக்கு கடன் தொகை பெற வங்கிகளை அணுகிய போது, அவர்கள் காட்டிய ஆர்வம் பாராட்டும்படி இருந்தது. கடன் தொகையையும் எளிதாக பெற முடிந்தது. மொத்த தொகையான ரூ. இரண்டாயிரத்து 427 கோடியில் தூத்துக்குடி, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், இந்திய டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.971 கோடியைத் தருவது, மீதியுள்ள ரூ. ஆயிரத்து 456 கோடியை கடனாக பெறுவது என்று திட்டமிடப்பட்டது. ஆறு வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தியதில், டாய்சி வங்கி, அயர்லாந்தில் துப்ளினில் செயல்பட்டு வரும் தீப்பா வங்கி உட்பட 10 வங்கிகள் கடன் தர முன் வந்தன. அரசு உத்தரவாதம் அளிக்க முன் வந்ததால், வங்கிகள் தயக்கம் காட்டவில்லை. தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த பண நெருக்கடியைச் சமாளிக்க, விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அசிஷ்குமார் சிங் கூறினார்.

செய்தி : தின மலர்(30/09/07)
__________________________________________________________________

இராமர் மேஸ்திரியா ?அணில் கட்டுச்சா, குரங்கு கட்டுச்சா இதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல நாம கால்வாய் வெட்ட முடியுமா?நம்ம கிட்ட துட்டு இருக்கா? என்னென்ன பலன்கள்..இந்தக் கடன் எப்ப எப்படி தீரும் ? இதையெல்லாம் மொதல்ல சொல்லுங்க.பிராக்டிகலா, உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு நல்லது அப்படீன்னா அதை புள்ளி விவரத்தோட மக்களுக்கு சொல்லிட்டா மக்களே இந்தத் திட்டத்துக்கு ஆதரவா நின்னுட்டுப் போராங்க.
அப்பமும் யாராவது "ராமர் பாலம்..சீதை கோலம்" அப்படீன்னு எதிர்த்தால் அப்ப கேக்கலாம் "இராமர் மேஸ்திரியா ? எந்தக் காலேஜு? அணில் கட்டுச்சா?, குரங்கு கட்டுச்சா? " இதெல்லாம்.

அதை விட்டுட்டு சும்மா தமிழனின் 150 வருட கனவு அப்படீன்னு சொல்லி 4000 கோடில எம்புட்டு ஆட்டையப் போடலாம் அப்படீன்னு ஆகாசக் கோட்டை கட்டினா யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

150 வருடத்திற்கு முன்னால் தமிழ"னும்" பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப் பட்டுத்தான் இருந்தான். அப்ப கால்வாய் கனவு கண்டது பிரிட்டிஷ்காரந்தான். அதுவும் அப்பத்திய அவனுடைய நலனுக்காக? ஆனா இன்னைக்கு ?

என்ன சந்தேகம் இவர்களுக்கு?

இராமர் என்பது ஒர் கற்பனை கதாபாத்திரம். இமயம் இருப்பதும், கங்கை இருப்பதும் எப்படி உண்மையோ அப்படியே ராமர் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதும் உண்மை.
இராமாயாணம் என்பது திராவிடர்களின் மீது ஆரியர்களது படையெடுப்பை ஒட்டி புனையப்பட்ட ஒரு புனை கதை.இதை பண்டித ஜவஹர்லால் நேருவே குறிப்பிட்டிருக்கிறார்

இப்படி ஒர் பக்கம் " இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை" என்று கூப்பாடு
மறுபக்கம்
" ராமன் கடவுளின் அவதாரமில்லை.. குடிகாரன்,மாமிசம் சாப்பிட்டான் என்று வால்மீகி ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது " என்று தூற்றுவது.

" (உங்களைப் பொருத்த வரை இல்லாதவன்) எப்படி புலாலும் மதுவும் சாப்பிட முடியும் "

உங்களது நிலைபாடு"ராமன் என்பவன் இல்லவே இல்லை..பொய்"என்பதா அல்லது " அப்படி இருந்து புலால் சாப்பிட்டு மது அருந்தினான் " என்பதா ?
இப்படி அவசரக் குடுக்கை, முந்திரிக் கொட்டை மாதிரி யோசிக்காமல் ஏதாவது சொல்லிவிட்டு அதற்கு சப்பைக் கட்டு கட்டுவதால்தான் விஷயம் பூதகரமாகி விடுவது புரிகிறதா? இல்லை வழக்கம் போல் வேண்டுமென்றேதான் இதை செய்து கொண்டிருக்கிறீர்களா?

முதலில் உங்களுக்கு "தெளிந்த" பின் (முடிந்தால்) சரியாக யோசித்து கேள்வி கேளுங்கள்.

ராமர்....பந்த்....உண்ணாவிரதம்...அப்புறம்

முன்னெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களின் தவறான அல்லது எதிரான கொள்கைகளை சுட்டிக் காட்டி எதிர் / மாற்று கட்சியினர் போன்றோர் "பந்த்" போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர்.இப்போது "பகுத்தறிவு கண்ட பரிணாம வளர்ச்சியால்" ஆட்சியில் உட்கார்ந்து கொண்டே "பந்த்" நடத்துவது. இது எந்த மாதிரி கையாலாகாததனம் என்று இன்னும் மக்களுக்கு புரியவில்லை

இப்படித்தான் போனதடவை உச்ச நீதி மன்றம் விதித்த இடக்கால தடையை எதிர்த்து (இட ஒதுக்கீட்டுக்கு எதிராக) 31.03.07 அன்று பந்த் நடத்தி ஓய்ந்தார்கள். அதற்கப்புறம் அதை முன்னெடுத்துச் செல்ல என்ன கிள்ளிப் போட்டார்கள் என்று கேட்டால் ??? ஒன்றும் இல்லை.

இப்போது 6 மாதம் கழிந்து மறுபடியும்..தேவையற்ற ஒரு ஸ்டண்ட்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒரு பந்த் அறிவிப்பு...யாருக்கு எதிராக அல்லது இதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தார்கள் என்பது வழக்கம் போல் பகவான் ராமருக்கே வெளிச்சம்.

ஆட்சியில் இருப்போரே பந்த் என்ற பெயரில் நடத்தும் கேலிக்கூத்துக்களை சுட்டிக்காட்டும் விதமாக "இனி எந்த மாநிலத்திலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பந்த் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது " போல் தெரிகிறது.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "உச்ச நீதி மன்றத்தின் " தடையை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டமாம்..அப்ப சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ? அது அப்புறம் பார்க்கலாம்...one at a time ?????!!!!!

அது சரி..இந்த உண்ணாவிரதம் ஒரு நாளைக்கா? தொடர் உண்ணாவிரதமா?

Tuesday, February 27, 2007

கிரீமிலேயர்

"பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயரை) கண்டுபிடிப்பது கடினமான ஒன்று' என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய வகுப்பினரை (கிரீமிலேயர் ) அடையாளம் கண்டு அவர்களை நீக்க வேண்டும் என்று மண்டல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வாய்ஸ் அமைப்பு சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.மாத்துர், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,"" கிரீமி லேயரை அடையாளம் காண பல்வேறு நடைமுறைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கிரீமி லேயரை கண்டு பிடிக்க எளிமையான பார்முலா ஏதும் இல்லை. கிரீமிலேயரை நீக்காமல், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருவது ஓட்டு வங்கிக்காக தான் என்று மனுதாரர் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கும், கிரீமி லேயர் அடையாளம் காணுவது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறுவதும் சரியல்ல. கிரீமி லேயர் நீக்கப்படாததால், உண்மையில் இட ஒதுக்கீட்டால் பலன் பெற வேண்டியவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் சரியான ஆதாரங்களுடன் விளக்கி கூறவில்லை,'' என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, February 10, 2007

பீட்டர் சொன்ன மேட்டர்

இன்றைய தினமலர் கார்ட்டூன்

"""அடேங்கப்பா"""


நல்ல மாற்றம்!

இன்றைய தினமலர் வாசகர் கடிதம்


மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:

நாத்திகராக இருந்த கண்ணதாசன் கடைசி காலத்தில் ஆத்திகராக மாறி, "அர்த்தமுள்ள இந்துமதம்' என்று அருமையான நுõலை எழுதி, இந்து மதத்தின் அருமை, பெருமைகளை எளிய தமிழில் உலகத்திற்கு தெரிய வைத்தார்.


திரைப்படங்களில் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்பி வந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். நமது கருணாநிதியும் இப்போது, பகுத்தறிவுக் கொள் கைகளுக்கு டாடா காட்டி விட்டு, பரம பக்தராக மாறும் சூழ்நிலை நிச்சயம் உருவாகி வருவது தெரிய ஆரம்பித் திருக்கிறது.


சாய் பாபா, கருணாநிதி இல்லத்திற்கு சென்ற போது, பகுத்தறிவாதி கருணாநிதியின் மனைவி தயாளு, சாய் பாபாவின் திருப்பாதங்களில் விழுந்து ஆசி பெறும் அற்புதக் காட்சியை பத்திரிகைகள் படம் பிடித்து வெளியிட்டன. அதைக் கருணாநிதியும், கண்குளிர கண்டு மகிழ்வதையும் போட்டோக்களில் காண முடிந்தது.


ஒரு அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை, தனி மனிதனான சாய் பாபா செய்து காட்டி, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே சாய் பாபாவிடம் கூவம் நதியை சீர்படுத்தி, செம்மைப் படுத்தி மணக்க வைக்க மனு கொடுத் திருக்கிறார் கருணாநிதி. ஆன்மிகவாதிகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருணாநிதி போன்ற பகுத்தறிவாதிகள் உணர்ந்து கொண்டு விட் டனர்.


எனவே, கருணாநிதியை ஆன்மிகம் நிச்சயம் மாற்றி, அவரை ஒரு தீவிர ஆன்மிகவாதியாக எதிர்காலத்தில் உலாவரச் செய்யும் என நம்புவோம்.