Saturday, February 10, 2007

நல்ல மாற்றம்!

இன்றைய தினமலர் வாசகர் கடிதம்


மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:

நாத்திகராக இருந்த கண்ணதாசன் கடைசி காலத்தில் ஆத்திகராக மாறி, "அர்த்தமுள்ள இந்துமதம்' என்று அருமையான நுõலை எழுதி, இந்து மதத்தின் அருமை, பெருமைகளை எளிய தமிழில் உலகத்திற்கு தெரிய வைத்தார்.


திரைப்படங்களில் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்பி வந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். நமது கருணாநிதியும் இப்போது, பகுத்தறிவுக் கொள் கைகளுக்கு டாடா காட்டி விட்டு, பரம பக்தராக மாறும் சூழ்நிலை நிச்சயம் உருவாகி வருவது தெரிய ஆரம்பித் திருக்கிறது.


சாய் பாபா, கருணாநிதி இல்லத்திற்கு சென்ற போது, பகுத்தறிவாதி கருணாநிதியின் மனைவி தயாளு, சாய் பாபாவின் திருப்பாதங்களில் விழுந்து ஆசி பெறும் அற்புதக் காட்சியை பத்திரிகைகள் படம் பிடித்து வெளியிட்டன. அதைக் கருணாநிதியும், கண்குளிர கண்டு மகிழ்வதையும் போட்டோக்களில் காண முடிந்தது.


ஒரு அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை, தனி மனிதனான சாய் பாபா செய்து காட்டி, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே சாய் பாபாவிடம் கூவம் நதியை சீர்படுத்தி, செம்மைப் படுத்தி மணக்க வைக்க மனு கொடுத் திருக்கிறார் கருணாநிதி. ஆன்மிகவாதிகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருணாநிதி போன்ற பகுத்தறிவாதிகள் உணர்ந்து கொண்டு விட் டனர்.


எனவே, கருணாநிதியை ஆன்மிகம் நிச்சயம் மாற்றி, அவரை ஒரு தீவிர ஆன்மிகவாதியாக எதிர்காலத்தில் உலாவரச் செய்யும் என நம்புவோம்.

0 comments: