Tuesday, February 27, 2007

கிரீமிலேயர்

"பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயரை) கண்டுபிடிப்பது கடினமான ஒன்று' என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய வகுப்பினரை (கிரீமிலேயர் ) அடையாளம் கண்டு அவர்களை நீக்க வேண்டும் என்று மண்டல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வாய்ஸ் அமைப்பு சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.மாத்துர், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,"" கிரீமி லேயரை அடையாளம் காண பல்வேறு நடைமுறைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கிரீமி லேயரை கண்டு பிடிக்க எளிமையான பார்முலா ஏதும் இல்லை. கிரீமிலேயரை நீக்காமல், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருவது ஓட்டு வங்கிக்காக தான் என்று மனுதாரர் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கும், கிரீமி லேயர் அடையாளம் காணுவது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறுவதும் சரியல்ல. கிரீமி லேயர் நீக்கப்படாததால், உண்மையில் இட ஒதுக்கீட்டால் பலன் பெற வேண்டியவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் சரியான ஆதாரங்களுடன் விளக்கி கூறவில்லை,'' என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, February 10, 2007

பீட்டர் சொன்ன மேட்டர்

இன்றைய தினமலர் கார்ட்டூன்

"""அடேங்கப்பா"""


நல்ல மாற்றம்!

இன்றைய தினமலர் வாசகர் கடிதம்


மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:

நாத்திகராக இருந்த கண்ணதாசன் கடைசி காலத்தில் ஆத்திகராக மாறி, "அர்த்தமுள்ள இந்துமதம்' என்று அருமையான நுõலை எழுதி, இந்து மதத்தின் அருமை, பெருமைகளை எளிய தமிழில் உலகத்திற்கு தெரிய வைத்தார்.


திரைப்படங்களில் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்பி வந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். நமது கருணாநிதியும் இப்போது, பகுத்தறிவுக் கொள் கைகளுக்கு டாடா காட்டி விட்டு, பரம பக்தராக மாறும் சூழ்நிலை நிச்சயம் உருவாகி வருவது தெரிய ஆரம்பித் திருக்கிறது.


சாய் பாபா, கருணாநிதி இல்லத்திற்கு சென்ற போது, பகுத்தறிவாதி கருணாநிதியின் மனைவி தயாளு, சாய் பாபாவின் திருப்பாதங்களில் விழுந்து ஆசி பெறும் அற்புதக் காட்சியை பத்திரிகைகள் படம் பிடித்து வெளியிட்டன. அதைக் கருணாநிதியும், கண்குளிர கண்டு மகிழ்வதையும் போட்டோக்களில் காண முடிந்தது.


ஒரு அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை, தனி மனிதனான சாய் பாபா செய்து காட்டி, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே சாய் பாபாவிடம் கூவம் நதியை சீர்படுத்தி, செம்மைப் படுத்தி மணக்க வைக்க மனு கொடுத் திருக்கிறார் கருணாநிதி. ஆன்மிகவாதிகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருணாநிதி போன்ற பகுத்தறிவாதிகள் உணர்ந்து கொண்டு விட் டனர்.


எனவே, கருணாநிதியை ஆன்மிகம் நிச்சயம் மாற்றி, அவரை ஒரு தீவிர ஆன்மிகவாதியாக எதிர்காலத்தில் உலாவரச் செய்யும் என நம்புவோம்.