இன்று சர்வதாரி ஆண்டின் முதல் நாள் மற்றும் சித்திரைத் திரு நாள்
சித்திரைத் திருநாளைப் பற்றி மதிமுக தலைவர் வைகோ பின் வரும் கருத்தை கூறியுள்ளார்.
""மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.
தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.
இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.""
வைகோவின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதுடன், எந்த நாளையும் மக்கள் மகிழ்சித் திருநாளாகக் கொண்டாடுவதிலோ , தெய்வ நம்பிக்கை இருப்பின் சிறப்பு வழிபாடு செய்வதிலோ தடையேதும் இல்லை என்ற கருத்தை வலியுருத்தும் விதமாய் இந்தநாளை, சித்திரை திருநாளாகவோ சர்வதாரி ஆண்டுப் பிறப்பாகவோ கொண்டாடும் அனைவருக்கும் " வாழ்த்து" தெரிவிக்கிறேன்.
மக்கள் மகிழும் எந்த நாளும் புது நாளே எந்த நாளும் திரு நாளே என்பதை அனைவரும் உணரவேண்டும்.மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.