Thursday, February 28, 2008

சுஜாதாவின் மரணம் மற்றும் TBCD போன்றவர்களின் பதிவுகள்

""சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ் """

காசி ஆறுமுகத்தின் இந்த வரிகள் சுஜாதா என்கின்ற தமிழ் எழுத்தாளர் அவரது கருத்து ,பார்வை இவற்றோடு ஒத்துப் போகாதவரும் தமிழுக்கு அவரின் பங்களிப்பை மறுக்கமாட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

இன்னும் இது போல சுஜாதாவை பார்பனர் என்றும் பார்ப்பனீயத்தை கடை பிடித்தவர் என்றும் எதிர்க்கும் பலரும் கூட அவரது தமிழ் இலக்கிய உலகிற்காற்றிய சேவையை மறுதலிக்கவில்லை.மாறாக அவர் மறைந்த இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளதை பல பதிவுகளின் வாயிலாக காண முடியும்.

ஆனால் இந்தத் தருணத்தை பயன் படுத்தி " சீப் பப்ளிசிடிக்காக மட்டுமே " அவரை தமிழ் துரோகி என்றெல்லாம் பதிவு போட்டுள்ள TBCD என்ற பதிவரின் புளகாங்கிதம் அடைய வைக்கும் தமிழ் பற்று பிரமிக்க வைக்கிறது.

தமிழ் வலைப் பதிவில் மறை கழண்டு சுற்றித் திரியும் சில போலி கம்யூனிச வியாதிகளைத் தவிர வேறு யாரும் அவர் கருத்தை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்தே இது எவ்வளவு கேவலமான ஒரு எண்ணம் என்று தெரிந்து கொள்ளலாம் .

இருந்தாலும் TBCD "இது என்ன இழவு வீடா" என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . ஆமாம் ..இது இழவு வீடுதான்..சுஜாதா என்கின்ற தமிழ் இலக்கியகர்த்தாவை இழந்து தவிக்கும் இழவு வீடுதான்.

அந்த இழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்காசை திருட்டுத் தனமாக திருட வந்த கயமை உங்கள் பதிவு.

தூ ..இதெல்லாம் ஒரு பொழைப்பா?