Tuesday, October 02, 2007

நேற்றைய போராட்டம் வெற்றியா ? தோல்வியா?

ஒரு பந்த் , போராட்டம் என்று அறிவித்தால் அதன் வெற்றியை எப்படி கணிப்பது?

வேறெப்படி? எத்தனை கடைகள் மூடியிருந்தன / திறந்திருந்தன, எத்தனை பொது போக்குவரத்து சாதனங்கள் ஓடின / ஓடவில்லை, பொதுமக்களை எந்த அளவிற்கு கஷ்டப் படுத்தினோம் / படுத்தவில்லை என்பதை வைத்துத்தான்.

போராட்டத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்யவேண்டும்?

மிரட்டல் மூலமாகவோ, பயமுறுத்தியோ ,வன்முறையாகவோ கடைகளை அடைக்க வைத்துவிட வேண்டும். அதே பாணியில் பொது போக்குவரத்து ஓடவிடாமல் செய்து விட்டால் பெருவாரியான பொதுசனம் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது அப்படி வந்தாலும் கடைகள் அடைத்திருப்பதால் செய்வதற்கு ஒன்றும் இருக்காது..அப்படியே வந்தாலும் கூட்டமாக நின்று கல்லடித்தால் முடிந்தது கதை ..ஒரு இடத்தில் நடந்தாலும் போதும்..செய்தி பரவிய பின் எந்த ஆண் மகனுக்கும் வெளியே வர தைரியம் வராது..அப்புறமென்ன போராட்டம் அமோக வெற்றிதான்..பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தின் உணர்வுகளை அப்படியே கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார்கள். இதை மறுநாள் பேட்டியில் சொல்லி மார் தட்டிக் கொள்ளலாம்.

நேற்றைய போராட்டமும் இந்த விதிகளுக்கு மாறாமல் அழகாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது...




ஆனால் நடுவில் உச்ச நீதி மன்றம் வந்து குழப்பி விட்டது.கொஞ்சம் விதிகள் மாறி விட்டபடியால் நேற்றைய விளையாட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் தமாஷாகவும் போயிற்று.


சில சாம்பிள்கள் கீழே.


போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை தி மு க மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த சங்கங்கள் பலமுள்லதாக இருப்பதால் பெருவாரியான பஸ்கள் ஓடவில்லை.மீறியும் ஓடிவிடக்கூடாது என்று இரவோடிரவாக டெப்போக்களில் முன்னால் நிற்கும் பஸ்களின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு எந்த பஸ்ஸுமே எடுக்க முடியாமல் செய்வது , காலையிலேயே கூட்டமாக சென்று டெப்பொக்களிலிருந்து பஸ்களை எடுக்க விடாமல் செய்வது போன்ற அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் அதிமுக யூனியனை சேர்ந்தவர்கள் பஸ்ஸை ஓட்ட முன் வந்தார்கள்- பொது நல சேவைக்காக அல்ல-எதிர்க் கட்சிப் போராட்டத்தை முறியடிக்கும் ஒரே நோக்கத்தில். ஆனால் அதிகார வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் வேலையை திறம்படவே செய்திருக்கிறார்கள்.பஸ்களை ஓட்டுங்க , ஆனா பஸ்ஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தா அதுக்கு டிரைவரும் கண்டக்டரும்தான் பொறுப்பு என்று பொறுப்பாக பதில் சொல்லியிருப்பார்கள்.அப்புறம் எவனாவது பஸ்ஸை எடுப்பான்?

ஆளுங்கட்சியின் நோக்கமே சுப்ரீம் கோர்ட்டே தடுத்தும் , நாங்கள் அறிவிக்காத போதும், பந்த் தானாகவே வெற்றிகரமாக நடந்து மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலித்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான்.

ஆனால் இவர்களது இந்த எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது. அதிமுக வேக வேகமாக காய்களை நகர்த்தி, பந்த் என்று சொல்லாவிட்டாலும் பஸ்கள் ஓடவில்லை என்றெல்லாம் வத்தி வைக்க கோபமான உச்ச நீதிமன்றம் "ஏன் ஆட்சியைக் கலைக்கக் கூடாது" என்று ஒரு குண்டத்தூக்கிப் போட, காலையில் பஸ்ஸை ஓட விடாமல் செய்தவர்களுக்கே பஸ்களை ஓடவிட்டு பந்த் எல்லாம் இல்லை என்று காட்டவேண்டிய கட்டாயம்.

ஆனால் இவர்கள் யூனியனே இதைச் செய்தால் கேவலமாயிற்றே அதனால் அதிகாரிகள் அதிமுக யூனியனைச் சேர்ந்தவர்களைப் போய் பஸ்ஸை எடுக்கச் சொல்லி கேட்க அவர்களோ" காலையில் நாங்கள் சொன்ன போது நீங்கள் விடவில்லை, இப்போது நீங்கள் கேட்டு நாங்கள் எதற்கு செய்யவேண்டும்? முடியாது என முரண்டு பிடித்துள்ளனர்.

அப்புறம் எப்படியோ ஒப்பேற்றி சில பஸ்களை போலிஸ் பாதுகாப்புடன் ஓடவிட்டு அதை வீடியோ படம் எடுத்து ஓட்டிவிட்டதற்கான ஆதாரம் சேகரித்துக் கொண்டனர்.ஏனென்றால் நாளைக்கு ஆதாரம் காட்ட வேண்டுமல்லவா? எல்லாம் நார்மல்தான் என்று.


சரி..எது எப்படியோ..பொதுமக்களின் கதியென்னவோ இப்படியாகத்தான் இருந்தது.




இந்த மாதிரியான அரசியல் கோமாளிகளுக்கு ஓட்டுப் போடும் மற்றும் துணை போகும் நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

படங்கள்:நன்றி-தினகரன் மற்றும் தினமலர்

4 comments:

Anonymous said...

orey kuttail ooriya mattaigal.

')) said...

//இந்த மாதிரியான அரசியல் கோமாளிகளுக்கு ஓட்டுப் போடும் மற்றும் துணை போகும் நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.//

100% உண்மை :(((((

')) said...

அனானிமஸ்

///orey kuttail ooriya mattaigal.///


இந்த மாதிரி standard phrse-க்கு என்ன சொல்றதுன்னு தெரியவில்லை.

')) said...

We The People said...

///100% உண்மை :(((((///

ஒத்த கருத்தை வெளிப்படையாய் ஆதரித்ததற்கு வந்தனம்